157 | பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள் இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய், செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்; அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி; கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |