177 | புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில் பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில் எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ் இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால் இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம் கொண்டாரே. |