13 | துறம் காட்டி, எல்லாம் விரித்தார் போலும்; தூ மதியும் பாம்பும் உடையார் போலும்; மறம் காட்டி, மும்மதிலும் எய்தார் போலும்; மந்திரமும் தந்திரமும் தாமேபோலும்; அறம் காட்டி, அந்தணர்க்கு அன்று ஆலநீழல் அறம் அருளிச்செய்த அரனார்-இந் நாள், புறங்காட்டு எரி ஆடிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே. |