102 | கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்; கானப்பேர் காதலார்; காதல்செய்து மடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்; மான் உரி தோல் மிசைத்தோளார்; மங்கை காண நடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; படம் மன்னு திருமுடியார்; பைங்கண்ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |