317 | மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி ஆவது இது கண்டாய்; “வானோர்க்கு எல்லாம் அதிபதியே! ஆரமுதே! ஆதீ!” என்றும்; “அம்மானே! ஆரூர் எம் ஐயா!” என்றும்; துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச் சூழும் வலம் செய்து தொண்டு பாடி, “கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா! கற்பகமே!” என்று என்றே கதறா நில்லே!. |