329 | பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய், போற்றி! பெண் உருவோடு ஆண் உரு ஆய் நின்றாய், போற்றி! கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி! காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி! அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி! அன்று அரக்கன் ஐந் நான்கு தோளும், தாளும், சிரம், நெரித்த சேவடியாய், போற்றி போற்றி! திருமூலட்டானனே, போற்றி போற்றி!. |