371 | “தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா! புராணனே!” என்றேன், நானே; “மூவா மதிசூடி!” என்றேன், நானே; “முதல்வா! முக்கண்ணனே!” என்றேன், நானே; “ஏ ஆர் சிலையானே!” என்றேன், நானே; இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி, “ஆவா!” என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |