395உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்;
   உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்;
நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்;
       நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்;
              உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த
                மழபாடி மன்னும் மணாளன் தானே.