35முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல்
                ஆகி நடு ஆகி முடிவு ஆனானே;
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம்
             நாகம் கொண்டு ஆடும் காட்சியானே;
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு
              நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி
அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;-
          அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.