413தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை ஆர்
                        கயிலாயன் நீயே என்றும்,
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும், ஆக்கூரில்-
                     தான் தோன்றி நீயே என்றும்,
புக்கு ஆய ஏழ் உலகும் நீயே என்றும், புள்ளிருக்கு
                        வேளுராய் நீயே என்றும்,
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும், நின்ற
               நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.