413 | தக்கார் அடியார்க்கு நீயே என்றும், தலை ஆர் கயிலாயன் நீயே என்றும், அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும், ஆக்கூரில்- தான் தோன்றி நீயே என்றும், புக்கு ஆய ஏழ் உலகும் நீயே என்றும், புள்ளிருக்கு வேளுராய் நீயே என்றும், தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே. |