540 | கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும்; குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்து ஆட வல்ல குழகர் போலும்; வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; அயில் ஆய மூ இலைவேல் படையார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |