543பத்திமையால் பணிந்து, அடியேன் தன்னைப் பல்-நாள்
                   பாமாலை பாடப் பயில்வித்தானை;
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை; எம்மானை; என்
                            உள்ளத்துள்ளே ஊறும்
அத் தேனை; அமுதத்தை; ஆவின் பாலை; அண்ணிக்கும்
                     தீம் கரும்பை; அரனை; ஆதிப்-
புத்தேளை; புள்ளிருக்கு வேளூரானை; போற்றாதே 
                        ஆற்ற நாள் போக்கினேனே!.