585 | அனல் ஒரு கையது ஏந்தி, அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி, புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன் போல் மேனிப் புனிதனார், புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த, சின விடையை மேற்கொண்டு, திரு ஆரூரும் சிரபுரமும் இடை மருதும் சேர்வார் போல, மனம் உருக, வளை கழல, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே. |