525 | கண் துஞ்சும் கரு நெடுமால் ஆழி வேண்டி, கண் இடந்து, சூட்ட, கண்டு அருளுவான் காண்; வண்டு உண்ணும் மதுக் கொன்றை, வன்னி, மத்தம், வான்கங்கை, சடைக் கரந்த மாதேவன் காண்; பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண்; பரமன் காண்; பரமேட்டி ஆயினான் காண்; வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலை யானே. |