662 | உரித்தானை, மத வேழம் தன்னை; மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை; உமை ஓர்பாகம் தரித்தானை; தரியலர் தம் புரம் எய்தானை; தன் அடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம் அரித்தானை; ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம், பொருள், வீடு, இன்பம், ஆறு அங்கம், வேதம், தெரித்தானை; திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே. |