685தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி,
             தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி,
மிக்கது ஒரு தீவளி நீர் ஆகாசம்(ம்) ஆய்,
        மேல் உலகுக்கு அப்பால் ஆய், இப்பாலானை;
அக்கினொடு முத்தினையும் அணிந்து,
   தொண்டர்க்கு அங்கு அங்கே அறுசமயம் ஆகி நின்ற
திக்கினை; என் திரு முதுகுன்று உடையான் தன்னை;
              தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.