736 | மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை, தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை, திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை, ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை, அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற நாவானை, நாவினில் நல் உரை ஆனானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |