776 | மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர் வணங்கப்படுவார் தாமே; சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; “சரண்” என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே; பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே; சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. |