Try error :java.sql.SQLException: Closed Resultset: next
825தடவரைகள் ஏழும் ஆய், காற்றும் ஆய், தீ ஆய்,
        தண் விசும்பு ஆய், தண் விசும்பின் உச்சி ஆகி,
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி,
                 காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி,
குடமுழவச் சதிவழியே அனல் கை ஏந்திக்
                    கூத்து ஆட வல்ல குழகன் ஆகி,
பட அரவு ஒன்று அது ஆட்டிப் பாசூர் மேய
         பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.