6.84 திருச்செங்காட்டங்குடி
திருத்தாண்டகம்
833பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
         பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல்
              எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி
அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை,
        அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த்
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை,
           செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.