913இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார்; ஈன்று
                 எடுத்த தாய் தந்தை பெண்டீர் மக்கள்
கழல் நம் கோவை ஆதல் கண்டும், தேறார்; களித்த
                        மனத்தராய்க் கருதி வாழ்வீர்!
அழல் நம்மை நீக்குவிக்கும், அரையன் ஆக்கும்,
             அமருலகம் ஆள்விக்கும், அம்மான் மேய
“பழனம் பழனமே” என்பீர் ஆகில், பயின்று எழுந்த பழ
                       வினை நோய் பாற்றல் ஆமே.