6.6 திருஅதிகை வீரட்டானம்
திருவடித் திருத்தாண்டகம்
54அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
      அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி;
சரவணத்தான் கைதொழுது சாரும்(ம்) அடி;
        சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி;
பரவுவார் பாவம் பறைக்கும்(ம்) அடி;
            பதினெண்கணங்களும் பாடும்(ம்) அடி;
திரை விரவு தென் கெடில நாடன்(ன்)அடி- திரு
            வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி.