957 | அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன்; அலர் கொன்றைத்தார் அணிந்த ஆறு கண்டேன்; பலிக்கு ஓடித் திரிவார் கைப் பாம்பு கண்டேன்; பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்; கலிக் கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்; கறை மிடறும் கண்டேன்; கனலும் கண்டேன்; வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் -மறை வல்ல மா தவனைக் கண்ட ஆறே!. |