475உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே! உமையவள்
                   தம் பெருமானே! இமையோர் ஏறே!
கழை இறுத்த, கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
               கயிலாயமலையானே! “உன்பால் அன்பர்
பிழை பொறுத்தி!” என்பதுவும், பெரியோய்! நின்தன்
      கடன் அன்றே? பேர் அருள் உன்பாலது அன்றே?
அழை உறுத்து மா மயில்கள் ஆலும் சோலை
              ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.