Try error :java.sql.SQLException: Closed Resultset: next
476உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி
                           திரிவாய்! உன்பால் அன்பு
கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும்
                          கையவனே! ஐயா! மெய்யே
மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே
                    விழுந்து, அழுந்தி, நாளும் நாளும்
அலந்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
              ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.