482 | உய்த்தவன் காண்; உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்; ஓங்காரத்து ஒருவன் காண்; உலகுக்கு எல்லாம் வித்து அவன் காண்; விண் பொழியும் மழை ஆனான் காண்; விளைவு அவன் காண்; விரும்பாதார் நெஞ்சத்து என்றும் பொய்த்தவன் காண்; பொழில் ஏழும் தாங்கினான் காண்; புனலோடு, வளர்மதியும், பாம்பும், சென்னி வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |