621ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள் நின்ற உணர்வு
           ஆகி, பிற அனைத்தும் நீயாய், நின்றாய்;
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும்
                      தீயனவும் காட்டா நின்றாய்;
தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! திரு
           ஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்-
ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
    அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.