6.30 திருஆரூர்
திருத்தாண்டகம்
300எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
           ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்;
வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்;
   வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட,
அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்;
       அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்-
செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு
               மூலட்டானத்து எம் செல்வன் தானே.