952எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கிழை
          ஓர்பால் உண்டோ? வெள் ஏறு உண்டோ?
விரிகின்ற பொறி அரவத் தழலும் உண்டோ?
   வேழத்தின் உரி உண்டோ? வெண்நூல் உண்டோ?
வரி நின்ற பொறி அரவச் சடையும் உண்டோ?
   அச் சடை மேல் இளமதியம் வைத்தது உண்டோ?
சொரிகின்ற புனல் உண்டோ? சூலம் உண்டோ?
          சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!.