617ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு(வ்)
             ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,
மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில்
                   இடுவதன் முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு(வ்), அகம்
          குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்
கையினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
           கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.