792கரும்பு இருந்த கட்டிதனை, கனியை, தேனை,
             கன்றாப்பின் நடுதறியை, காறையானை,
இரும்பு அமர்ந்த மூ இலைவேல் ஏந்தினானை,
       என்னானை, தென் ஆனைக்காவான் தன்னை,
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானை,
          தூயானை, தாய் ஆகி உலகுக்கு எல்லாம்
தரும் பொருளை, தலையாலங்காடன் தன்னை,
               சாராதே சால நாள் போக்கினேனே!.