| 868 | கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண்; கலை பயிலும் கருத்தன் காண்; திருத்தம் ஆகி, மலை ஆகி, மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி, விண் ஆகி, நின்றான் தான் காண்; தலை ஆய மலை எடுத்த தகவு இலோனைத் தகர்ந்து விழ, ஒரு விரலால் சாதித்து, ஆண்ட சிலை ஆரும் மடமகள் ஓர் கூறன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே. |