376“விண்ணோர் தலைவனே!” என்றேன், நானே;
     “விளங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எண்ணார் எயில் எரித்தாய்!” என்றேன், நானே;
          “ஏகம்பம் மேயானே!” என்றேன், நானே;
“பண் ஆர் மறை பாடி!” என்றேன், நானே;
          “பசுபதீ! பால்நீற்றாய்!” என்றேன், நானே;
“அண்ணா! ஐயாறனே!” என்றேன், நானே; என்று
             என்றே நான் அரற்றி நைகின்றேனே!.