376 | “விண்ணோர் தலைவனே!” என்றேன், நானே; “விளங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே; “எண்ணார் எயில் எரித்தாய்!” என்றேன், நானே; “ஏகம்பம் மேயானே!” என்றேன், நானே; “பண் ஆர் மறை பாடி!” என்றேன், நானே; “பசுபதீ! பால்நீற்றாய்!” என்றேன், நானே; “அண்ணா! ஐயாறனே!” என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |