483 | கூற்று அவன் காண், குணம் அவன் காண், குறி ஆனான் காண், குற்றங்கள் அனைத்தும் காண், கோலம் ஆய நீற்றவன் காண், நிழல் அவன் காண், நெருப்பு ஆனான் காண், நிமிர் புன்சடை முடிமேல் நீர் ஆர் கங்கை ஏற்றவன் காண், ஏழ் உலகும் ஆயினான் காண், இமைப்பு அளவில் காமனை முன் பொடி ஆய் வீழ மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |