Try error :java.sql.SQLException: Closed Resultset: next
614“இலம்; காலம், செல்லா நாள்” என்று, நெஞ்சத்து
            இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு,
விலங்காதே, நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு,
       மெய் அன்பு மிகப் பெய்து, பொய்யை நீக்கி,
துலங்காமே வானவரைக் காத்து நஞ்சம் உண்ட
          பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து,
கலங்காதே, தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
          கன்றாப்பூர் நடு தறியைக் காணல் ஆமே!.