| 642 | நீற்றவன் காண்; நீர் ஆகித் தீ ஆனான் காண்; நிறை மழுவும், தமருகமும், எரியும், கையில்- தோற்றவன் காண்; தோற்றக் கேடு இல்லாதான் காண்; துணை இலி காண்; துணை என்று தொழுவார் உள்ளம் போற்றவன் காண்; புகழ்கள் தமைப் படைத்தான் தான் காண்; பொறி அரவும், விரிசடை மேல், புனலும் கங்கை ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |