474 | கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி, கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி, கங்காளவேடராய் எங்கும் செல்வீர்; நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்? நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே ஆனாய்! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!. |