472சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து
                        உமையவளை அஞ்ச நோக்கிக்
கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கை வைத்து ஓடும் களிறு
                    உரித்த கங்காளா! எங்கள் கோவே!
நிலத்தார் அவர் தமக்கே பொறை ஆய், நாளும், நில்லா
                         உயிர் ஓம்பும் நீதனேன் நான்
அலுத்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
               ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.