570 | செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித் தேடி உணராமை நின்றாய், போற்றி! பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி! பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி! மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி! மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி! கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |