672சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி,
          தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை;
நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே
                     செலும் வண்ணம் நல்கினானை;
பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து,
       எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க-
கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;
             கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.