468தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை; தக்கன்
               தன் பெரு வேள்வி தகர்த்தான் தன்னை;
பிரித்தானை; பிறை தவழ் செஞ்சடையினானை; பெரு
             வலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை; நேரிழையாள் பாகத்தானை; நீசனேன் உடல்
                               உறு நோய் ஆன தீர
அரித்தானை; ஆவடு தண் துறையுள் மேய அரன் அடியே
                 அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.