306நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்;
   நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்;
மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்;
      வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்;
துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்;
          சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு
             மூலட்டானத்து எம் செல்வன் தானே.