503நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த நஞ்சு அமுது
                           செய்தானை, அமுதம் உண்ட
மற்ற(அ)அமரர் உலந்தாலும் உலவாதானை, வருகாலம்
                                செல்காலம் வந்தகாலம்
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு
                சுடரை, இரு விசும்பின் ஊர்மூன்று ஒன்றச்
செற்றவனை, திரு வீழிமிழலையானை, சேராதார்
                             தீநெறிக்கே சேர்கின்றாரே.