698 | நல்-தவனை; நால்மறைகள் ஆயினானை; நல்லானை; நணுகாதார் புரங்கள் மூன்றும் செற்றவனை; செஞ்சடை மேல்-திங்கள் சூடும், திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேய, கொற்றவனை; கூர் அரவம் பூண்டான் தன்னை; குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும் பற்றவனை; பள்ளியின் முக்கூடலானை; பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!. |