845 | நம்பன்காண், நரை விடை ஒன்று ஏறினான் காண், நாதன் காண், கீதத்தை நவிற்றினான் காண்; இன்பன் காண், இமையா முக்கண்ணினான் காண், ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு அன்பன் காண், ஆர் அழல் அது ஆடினான் காண், “அவன், இவன்” என்று யாவர்க்கும் அறிய ஒண்ணாச் செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண்; அவன் என் சிந்தையானே. |