302 | நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்; வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்; வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்; கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்; கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்- சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே. |