524 | நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன் என நிற்கின்றான் காண்; கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர் காலால் கழிவித்தான் காண்; செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தினான் காண்; வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |