111 | நோக்காதே எவ் அளவும் நோக்கினானை, நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை, ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை, அணுகாதார் அவர் தம்மை அணுகாதானை, தேக்காதே தெண்கடல் நஞ்சு உண்டான் தன்னை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!. |