375“பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன், நானே;
           “பசுபதீ! பண்டரங்கா!” என்றேன், நானே;
“கற்றார்கள் நாவினாய்!” என்றேன், நானே; “கடு
       விடை ஒன்று ஊர்தியாய்!” என்றேன், நானே;
“பற்று ஆனார் நெஞ்சு உளாய்!” என்றேன், நானே;
    “பார்த்தற்கு அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே!” என்று
              என்றே நான் அரற்றி நைகின்றேனே!.