| 375 | “பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன், நானே; “பசுபதீ! பண்டரங்கா!” என்றேன், நானே; “கற்றார்கள் நாவினாய்!” என்றேன், நானே; “கடு விடை ஒன்று ஊர்தியாய்!” என்றேன், நானே; “பற்று ஆனார் நெஞ்சு உளாய்!” என்றேன், நானே; “பார்த்தற்கு அருள்செய்தாய்!” என்றேன், நானே; “அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |