884 | பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்; கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்; பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்; எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |