884பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம்
                         சித்தத்து இருந்தார் போலும்;
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள்
                           ஏதம் களைவார் போலும்;
பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும்
                        ஏழ்மலையும் தாமே போலும்;
எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான்
                                தோன்றி ஈசனாரே.